search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணம் கையாடல்; அஞ்சலக அதிகாரி பணி நீக்கம்
    X

    பணம் கையாடல்; அஞ்சலக அதிகாரி பணி நீக்கம்

    • பணம் கையாடல்; அஞ்சலக அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டார்.
    • ரூ. 23 ஆயிரத்தை சுந்தரமூர்த்தி கையாடல் செய்ததாக தெரிகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (39). இவர் இனாம் ரெட்டியப்பட்டி அஞ்சல் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். பணியில் இருந்த போது வாடிக்கையாளரின் ரூ. 23 ஆயிரத்தை சுந்தரமூர்த்தி கையாடல் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்திய பின் சுந்தரமூர்த்தியை உயரதிகாரிகள் பணி நீக்கம் செய்தனர்.

    இந்த நிலையில் விருதுநகர் அஞ்சல் துறை உப கோட்ட ஆய்வாளர் ராமசாமி கையாடல் செய்து தொடர்பாக சுந்தரமூர்த்தி மீது போலீசில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×