search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.6.89 கோடியில் கட்டப்பட்டு வரும் மகப்பேறு பிரிவு
    X

    ரூ.6.89 கோடியில் கட்டப்பட்டு வரும் மகப்பேறு பிரிவு

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.6.89 கோடியில் கட்டப்பட்டு வரும் மகப்பேறு பிரிவு 6 மாதத்தில் பணிகள் நிறைவடையும்.
    • வருகிற ஜனவரி மாதத்தில் புதிய கட்டிடம் பயன்பாட்டிற்கு வரும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் 135 படுக்கை வசதிகள் உள்ளன. தினமும் சராசரியாக 1,500 பேர் புற நோயாளிகளாக சிகிச்சைக்கு வருகின்றனர்.

    இங்கு 18 மருத்துவர்கள், 30 செவிலியர்கள் பணிபுரி கின்றனர். இந்த மருத்துவ மனையில் மாதம்

    300-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெறு கிறது.

    வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை, குன்னூர், எம்.புதுப்பட்டி, மம்சாபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற கிரா மங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லி புத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் அதிக பிரசவங்கள் நடை பெறும் மருத்துவ மனைகளில் ஒன்றாக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு புதிய மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுக்க புதிய கட்டிடம் கட்டுவதற்காக கடந்த அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.

    ரூ.6.89 கோடி மதிப்பீட்டில் புதிய மகப்பேறு மற்றும் குழந்தை கள் சிகிச்சை பிரிவு கட்டிடம் 27 ஆயிரத்து 750 சதுர அடி பரப்பளவில் 3 தளங்களுடன் கட்டப்பட்டு வருகிறது. இதில் லிப்ட், பிரத்யேக அவசரகால வெளியேற்று சாய்தளம், ஜெனரேட்டர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

    அறுவை சிகிச்சை மையம், உயர் சார்பு அலகு (ஹெச்.டி.யு), பச்சிளம் குழந்தைகளுக்கான இன்கு பேட்டர் வசதியுடன் சேர்த்து 100 படுக்கைகள் கொண்ட தாக மப்பேறு மற்றும் குழந்தைகள் சிகிச்சை பிரிவு அமைக்கப்படுகிறது. இந்த மகப்பேறு பிரிவு கட்டிடம் பயன்பாட்டுக்கு வரும் போது ஏற்கனவே உள்ள 135 படுக்கைகளுடன் சேர்த்து 235 படுக்கை கொண்ட பிரமாண்ட மருத்துவமனையாக இருக்கும்.

    இதுகுறித்து மருத்து வர்கள் கூறுகையில், மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்படும் போது, அதற்குரிய நவீன மருத்துவ கருவிகள், கூடுதல் மருத்து வர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். தற்போது தரைத்தளம் மற்றும் முதல் தளம் கட்டு மான பணிகள் நிறைவ டைந்துள்ளது. 6 மாதங்களில் இந்த கட்டுமான பணிகள் நிறைவடைந்து வருகிற ஜனவரி மாதத்தில் புதிய கட்டிடம் பயன்பாட்டிற்கு வரும் என்றனர்.

    Next Story
    ×