search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவரை கடத்தி கொலை வெறி தாக்குதல்
    X

    கல்லூரி மாணவரை கடத்தி கொலை வெறி தாக்குதல்

    • ராஜபாளையம் அருகே கல்லூரி மாணவரை கடத்தி கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
    • ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தென்றல் நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் முகேஷ் (வயது 19). இவர் கோவில்பட்டியில் உள்ள அரசு கல்லூரியில் பி.ஏ.படித்து வருகிறார். செல்லம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் முருகேஷ். இவரும் முகேஷும் நண்பர்கள்.

    முருகேசுக்கும், சோமையாபுரம் பகுதியைச் சேர்ந்த கிடாய் என்ற ரஞ்சித்குமாருக்கும் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்தது. இது தொடர்பான பிரச்சினையில் முகேஷ் தனது நண்பருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார் முகேஷை தாக்க திட்டமிட்டார். நேற்று காலை முகேஷ் தென்றல் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ரஞ்சித் குமார் மற்றும் அவரது நண்பர்கள் முகேஷை கடத்தி அங்குள்ள ஹாக்கி மைதானத்திற்கு கொண்டு சென்றனர்.

    அங்கு ரஞ்சித்குமார், அவரது நண்பர்கள் மணிசங்கர், துரைப்பாண்டி, முத்தையா, ராஜலிங்கம் ஆகிய 5 பேர் பீர் பாட்டிலால் முகேஷ் மண்டையை உடைத்தனர். மேலும் உருட்டு கட்டையால் சரமாரி யாக அடித்து கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    இந்த புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா வழக்கு பதிவு செய்து ரஞ்சித்குமார் உள்பட 5 பேரை தேடி வருகின்றார்.

    Next Story
    ×