search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சர்வதேச யோகா தினம்
    X

    சர்வதேச யோகா தினம்

    • சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
    • கல்லூரி தாளாளர் சோலைசாமி தலைமை தாங்கினார்.

    சிவகாசி

    பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் விருதுநகர் மாவட்ட நேரு யுகேந்திரா-விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து சர்வதேச யோகா தினத்தை கல்லூரி கலையரங்கில் கொண்டாடியது.

    இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரியின் இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் விஷ்ணுராம் மற்றும் டீன் மாரிச்சாமி வாழ்த்துரை வழங்கினார். மாணவி சவுமியா வரவேற்புரையாற்றினார்.

    சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்ட இளைஞர் நல அதிகாரி ஞானசந்திரன் கலந்து கொண்டார். விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மாவட்ட சமூக சுகாதார அலுவலர் ராஜாகுமார், யோகா அமைப்பை சேர்ந்த ஜெயக்குமார், ரமேஷ், கோபிநாத், கருப்பசாமி, அசோக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர். துர்க்கை ஈஸ்வரன், உடற்கல்வி ஆசிரியர் சுந்தர மூர்த்தி, நேரு-யுகேந்திர அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    Next Story
    ×