search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடைநிலை-பட்டதாரி ஆசிரியர்  பொது மாறுதல் கலந்தாய்வு
    X

    இடைநிலை-பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு

    • இடைநிலை-பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்ட பின் எவ்வித திருத்தமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    விருதுநகர்

    தொடக்க கல்வி இயக்குனரகம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் கலந்தாய்வு வருகிற ஜூலை 7-ந் தேதியும், பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு ஜூலை 8-ந் தேதியும் நடைபெற உள்ளன.

    கடந்த 2021-2022 உபரி ஆசிரியர் பணி நிரவல் மற்றும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. பணி நிரவல் ஆகியவற்றில் சென்ற ஆசிரியர்கள் மாறுதலுக்கு விண்ணப்பித்திருந்தால் அவர்களின் பெயர்களை நீக்க வேண்டியதில்லை.

    அதே கல்வி ஆண்டில் பொது மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் விவரங்களை கொண்டே மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான முன்னுரிமைப்பட்டியல் ஏமிஸ் இணையதளத்தில் வெளியிடப்படும்.

    அதற்கு முன்னதாக திருத்தங்கள் அனுப்ப வேண்டும். முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்ட பின் எவ்வித திருத்தமும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×