என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாரம்பரிய மரபு பயணம்; கலெக்டர் பங்கேற்பு
- வரலாற்று சின்னங்களை பார்க்க பாரம்பரிய மரபு பயணத்தில் பொதுமக்களுடன் கலெக்டர் இணைந்து பங்கேற்றார்.
- தொல்லியல் மற்றும் வரலாற்று சின்னங்கள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்தில் உலக பாரம்பரிய தினத்தையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத் துறை இணைந்து முதன்முறையாக ஏற்பாடு செய்த விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முக்கிய தொல்லியல் மற்றும் வர லாற்று சின்னங்களை காண்ப தற்கான ஒரு நாள் பாரம்பரிய மரபு பயணத்தை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்து இந்த பாரம்பரிய மரபு பயணத்தில் கலந்து கொண்டார்.
தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகம் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முக்கிய தொல்லியல் மற்றும் வரலாற்று சின்னங்கள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு இந்த ஒரு நாள் பாரம்பரிய மரபு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த ஒரு நாள் பாரம்பரிய மரபு பயணத்தில் மூவரை வென்றான் பகுதியில் உள்ள 800 ஆண்டு பழமையான இடைக் கால பாண்டியர் காலத்து மலைக்ழு கொழுந்தீசுவரர் குடைவரை கோவில் அங்குள்ள கல்வெட்டுகளில் முதலாம் மாரவர்ம சுந்தரப்பண்டிய முடிசூட்டு விழாவின் செய்திகள் இடம்பெற்றுள்ளதையும், அதற்கு பின் ஆண்ட குலசேகர பாண்டியனின் ஆட்சி காலத்தில் காரான்மை கானியாக 10 பேருக்கு தானமாக வழங்கிய செய்தி யையும் கலெக்டர் மற்றும் பொதுமக்கள் பார்வை யிட்டனர்.
குன்னூரில் உள்ள ஏறத்தாழ 2ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான வரலாற்று ரீதியாக ஒரு குழுத்தலைவன் அல்லது சமூக தலைவன் மரண மடையும் போது நினைவுச் சின்னமாக எழுப்பப்படும், சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட சுமார் 20 அடி உயரமுள்ள நெடுங்கல் உள்ள தையும், கிருஷ்ணன்ே ேகாவில் மலை அடிவாரத்தில் சிதைந்த நிலையில் உள்ள உடைந்த முதுமக்கள் தாழி ஓடுகள், தாழியுடைய வாய் விழிம்புகள், சிறு மண்பாண்ட ஓடுகளையும் பார்வையிட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்- மதுரை சாலையில் திருமலை நாயக்கர் காலத்தில் பயணமாக செல்லும் பொதுமக்கள் தங்கு வதற்காக கலைசிற்பங்களுடன் கட்டப்பட்ட கல்மண்டபம், மன்னர் தங்குவதற்காக கட்டப்பட்ட தங்கும் விடுதி கட்டடத்தையும், கி.பி. 1623 முதல் கி.பி. 1659 வரை ஆண்ட திருமலைநாயக்கர் மன்னர், ஆண்டாள் கோவி லுக்கு வரும் போது தங்கு வதற்காக வட்டவடிவிலான முற்றம், அலங்காரங்கள், ஓவியங்களுடன் கட்டப்பட்ட பிரமாண்ட அரண்மனை, பின்னர் 19-ம் நூற்றாண்டில் நீதிமன்றமாக செயல்பட்ட வரலாற்று சின்னங்களையும் பொதுமக்களுடன் இணைந்து கலெக்டர் பார்வையிட்டார்.
இந்த சுற்றுலா மூலம் மாவட்டத்தில் உள்ள தொன்மையான, பாரம்பரியம் மிக்க இடங்களை வெளிக் கொணர்ந்து உலகறிய செய்வதே நோக்கம் என்று கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்தார்.
இந்த பயணத்தில் மாவட்ட சுற்றுலா அலுவலர் அன்பரசன் உட்பட மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






