என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கனமழையால் குண்டாற்றில் வெள்ளப்பெருக்கு
- திருச்சுழி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் குண்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- எச்சரிக்கை அறிவிப்புகள் வைத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சுழி
வடகிழக்கு பருவமழை காரணமாக திருச்சுழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று திருச்சுழி, உடையனாம்பட்டி, கிருஷ்ணாபுரம், புதுப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் குண்டாற்றில் பல ஆண்டு களுக்கு பின்னர் மழை நீர் பெருக்கெடுத்து செல்கிறது. இதனால் உடையனாம்பட்டி தரைப் பாலத்தின் மேல் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
வெள்ள அபாயத்தை உணராத பொதுமக்கள் தரைப்பாலத்தின் மேல் நடந்தும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளித்தும் மற்றும் இருசக்கர வாகனங்களில் பாலத்தை கடந்தும் வேறு வழியின்றி தங்களது ஊருக்கு செல்கின்றனர்.
மேலும் தரைப்பாலத்தின் மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தரைப்பாலம் வழியாக உடையனாம்பட்டி, சென்னி லைக்குடி, தாமரைக்குளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல ஆண்டுகளுக்குப்பின் குண்டாற்றில் வெள்ளம் செல்வதால் அதனை சுற்றுவட்டார கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
மேலும் தற்போது வைகை அணை 69 அடிக்கு மேல் உயர்ந்துள்ளதால் விவசாயத்திற்காக விரை வில் தண்ணீர் திறக்கப்படும் பட்சத்தில் தரைப் பாலங்களில் தண்ணீரின் வேகம் அதிகரிக்க கூடும்.இதனால் தரைப்பா லங்களில் ஆற்றை கடக்கும் போது அசம்பாவிதங்கள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ள தாகவும் சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் திருச்சுழி மற்றும் நரிக்குடி பகுதிகளை சுற்றியுள்ள தரைப்பாலங்களில் எச்சரிக்கை அறிவிப்புகள் வைத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Heading
Content Area
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்