search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்மா உணவகத்தில் உணவு தட்டுப்பாடு
    X

    அம்மா உணவகத்தில் உணவு தட்டுப்பாடு

    • சிவகாசி அம்மா உணவகத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    • உணவு சாப்பிட வரும் ஏழைகள், முதியவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.

    சிவகாசி

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களில் ஒன்று அம்மா உணவகம். ஏழை-எளிய மக்கள் பசியால் வாடக்கூடாது என்பதற்காக குறைந்த விலையில் உணவுகள் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். இதன் மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

    அம்மா உணவகங்களில் சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும்,லெமன் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும், விற்கப்படுகிறது. காலை இட்லி, பூரி, மலிவு விலையில் விற்ப்படுகிறது.

    சிவகாசி மாநாகராட்சி சார்பில் நடத்தப்படும் அம்மா உணவகத்தில் தினமும் மதியம் 1 மணிக்கு லெமன் சாதம், தயிர் சாதம் காலியாகி விடுகிறது. சாம்பார் சாதம் 1.30 மணியளவில் காலியாகி விடுகிறது. ஆனால் மாலை 3 மணி வரை உணவுகள் வழங்க வேண்டும் என அரசு உத்தரவு உள்ளது.

    ஆனால் சிவகாசி மாநக ராட்சி நடத்தும் அம்மா உணவகம் 2 மணிக்கு பிறகு மூடப்பட்டு விடுவதால் உணவு சாப்பிட வரும் ஏழைகள், முதியவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.

    எனவே தேவையான அளவு உணவு சமைத்து தினமும் 2.30 மணி வரையிலாவது உணவு வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொது மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர். இதுதொடர்பாக மாநகராட்சி நடவடிக்கை எடுக்க முன்வருமா?.

    Next Story
    ×