search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் கைது - ரெயில்வே போலீசார் எச்சரிக்கை
    X

    ரெயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் கைது - ரெயில்வே போலீசார் எச்சரிக்கை

    • ரெயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்
    • விருதுநகர் ரெயில்வே இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை

    விருதுநகர்

    விருதுநகர் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ரவிநாயர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மாயாண்டி மற்றும் போலீசார் விருது நகர் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில், ரெயில்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட னர். பயணிகள் எடுத்து வந்த பைகளில் பட்டாசுகள் உள்ளதா? என தீவிர சோதனை செய்து பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

    அப்போது பயணிகள் வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகளவில் பட்டாசுகள் கொண்டு சென்ற மதுரையை சேர்ந்த மோகன்குமார், பிரவீன், கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த வடிவேலு, ஆகியோர் கைது செய்யப் பட்டனர். தொடர்ந்து சிவகாசி, விருதுநகர் ரெயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்கா ணிப்பில் ஈடுபட்டனர். ரெயில்களி லும் பயணிகள் யாரும் பட்டாசு எடுத்து வந்துள்ளனரா? என சோதனை செய்தனர்.

    பொதுமக்கள் யாரும் ரெயில்களில் பட்டாசுகளை எடுத்து செல்லக்கூடாது. விதிகளை மீறி பட்டாசுகளை கொண்டு செல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என விருதுநகர் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ரவிநாயர் எச்சரித்துள்ளார்.

    Next Story
    ×