search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்-முதியவர் தற்கொலை
    X

    பெண்-முதியவர் தற்கொலை

    • பெண்-முதியவர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • வத்திராயிருப்பு போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    காரியாபட்டி எழில்நகர் பகுதியை சேர்ந்தவர் எட்டிராஜ் (54).வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி நாகேஷ்வரி. இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக உடல்நல பாதிப்பால் நாகேஷ்வரி அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆசிட் எடுத்து குடித்துள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகேஷ்வரி இறந்தார். இதுகுறித்து எட்டிராஜ் அளித்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வத்திராயிருப்பு அருகே ஆகாசம்பட்டியை சேர்ந்தவர் பால்ராஜ் (70). சில ஆண்டுகளாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பால்ராஜின் மகன் தங்கசாமி அளித்த புகாரின் பேரில் வத்திராயிருப்பு போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×