search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆங்கில மொழித்திறன் கருத்தரங்கு
    X

    ஆங்கில மொழித்திறன் கருத்தரங்கு

    • காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கில மொழித்திறன் கருத்தரங்கு நடந்தது.
    • ஒருங்கிணைப்பாளர் அர்ச்சனா தேவி நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத்துறை சார்பில் மொழித்திறன் மற்றும் ஆளுமைத்திறனை மேம்படுத்துதல் என்னும், தலைப்பில் 3 நாள் கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    சிவகாசி. வீ கம்யூனிகேட் நிறுவனத்தைச் சேர்ந்த மென்திறன் மற்றும் மொழிப் பயிற்சியாளர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டு மாணவர்க ளுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தினர்.

    ஆங்கிலத்துறையைச் சேர்ந்த பேராசிரியை நாகஜோதி வரவேற்றார். கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். ஆங்கிலத்துறைத் தலைவி பெமினா வாழ்த்துரை வழங்கினார். ஆளுமைத்திறன் மற்றும் மொழித்திறனை மேம்படுத்துவது பற்றி ராஜலட்சுமி மென்திறன் பயிற்சியாளர் செயல்முறை பயிற்சிகளுடன் விளக்கம் அளித்தார். 2-ம் நாள் நிகழ்ச்சியில் மென்திறன் பயிற்சியாளர், தீனதயாளன் தலைமைத்துவம் மற்றும் மொழித்திறன் அடிப்படையிலான செயல்பாடுகள் என்ற தலைப்பில் உரையாற்றி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

    பயிற்சியாளர்கள் கிட்டி நான்ஸி மற்றும் கல்பனா, ஆகியோரால் ''பேசும் மொழி வடிவம் மற்றும் உடல்மொழி'' குறித்தப் பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

    3-ம் நாள் காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறை முன்னாள் மாணவர்கள் மற்றும் வீ.கம்யூனிகேட் நிர்வாகிகளான ஏ.ஆர்.மனோஜ் மற்றும் ஹரிஹரன் கார்ப்பரேட் உலகின் தேவைக்கேற்ப எப்படி திறமைகளை வளர்த்துக் கொள்வது என்னும் தலைப்பில் பயிற்சி வகுப்பு கள் நடத்தினர். கருத்தரங்க பயிற்சியில் சிறப்பாக பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஒருங்கி ணைப்பாளர் அர்ச்சனா தேவி நன்றி கூறினார்.

    Next Story
    ×