search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதரவற்ற 211 குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகள்
    X

    குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    ஆதரவற்ற 211 குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகள்

    • ஆதரவற்ற 211 குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர்கள் மற்றும் கவுன்சிலர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதி பொன்னகரத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், மருதுநகரில் உள்ள லைட்ஆப் லைப் குழந்தைகள் காப்பகம் மற்றும் சேத்தூரில் உள்ள அருளோதயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் என 3 காப்பகங்களில் உள்ள 211 ஆதரவற்ற குழந்தைகளுக்கு 5 வருடங்களாக தீபாவளிக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. புத்தாடை வழங்கி வருகிறார்.

    தற்போது 6-வது முறையாக அந்த குழந்தைகளை ராஜபாளையம் ஜவுளி கடைக்கு அழைத்து வந்த தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தனது 11,12,13-வது மாத ஊதியத்திலிருந்து ரூ.3லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை வாங்கி கொடுத்து ஆசீர்வதித்தார்.

    குழந்தைகளிடன் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில், உங்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பது கல்வி மட்டுமே ஆகும். அனைவரும் சிறந்தமுறையில் கல்வி கற்க வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆதரவற்ற குழந்தைகளுக்கென பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்தார். அதுபோல் முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவாக இருந்து அவர்களின் முன்னேற்றத்தில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார்.

    ஆதரவற்ற குழந்தைகளுக்கு முதல்வரும், விருதுநகர் மாவட்ட அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரும், நானும், ராஜபாளையம் தொகுதி மக்களும் உறுதுணையாக இருப்போம்.

    தீபாவளி திருநாளை அனைவரையும்போல் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.நீங்கள் ஆதரவற்ற குழந்தைகள் அல்ல. அனைவரின் ஆதரவையும் பெற்ற குழந்தைகள்* எனக்கூறி தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.

    இதில் தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா மற்றும் கவுன்சிலர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×