என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்டக்டர்-தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
    X

    கண்டக்டர்-தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

    • கண்டக்டர்-தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஆலங்குளம் அருகே உள்ள பி.கரிசல்குளத்தை சேர்ந்தவர் பாலசுப்பிர மணியன் (வயது42). பள்ளி பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்தார். இவ ருக்கு மது பழக்கம் இருந்த தாக கூறப்படுகிறது. இதனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் அவரது தாய் புதிதாக கட்டி வரும் வீட்டின் அருகே போடப் பட்டிருந்த செட்டில் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி முத்துமாரி ஆலங்குளம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியன் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் கரும்புலி ஆண்டவர்(28), கூலித் தொழிலாளி. மது பழக்கத் திற்கு அடிமையான இவர் எப்போதும் குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி குருவுதாய் நத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×