என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காளீஸ்வரி கல்லூரியில் பிற கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள்
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பிற கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தன.
- சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி அணியினர் முதலிடத்தை பிடித்து வெற்றி கேடயத்தை பெற்றனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் தமிழியல் துறை சங்கப்பலகை இலக்கிய மன்றத்தின் சார்பில் "வானம்பாடி 2023" என்ற தலைப்பில் மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தன.
முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். பேச்சு, கோலம், மருதாணிப் போட்டி, முகஓவியம், நெருப்பின்றி சமைத்தல், காய்கறிகளில் உருவம் அமைத்தல், வினாடி-வினா, மவுன நாடகம், நிலைக்காட்சி, கிராமிய நடனம் உள்ளிட்ட 10 போட்டிகள் நடந்தன.
இதில் கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த 9 கல்லூரிகளில் இருந்து 220 மாணவர்கள் பங்கேற்றனர். தமிழியல் துறைத்தலைவர் அமுதா வரவேற்றார். தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் பொற்கொடி நன்றி கூறினார். இந்த நிகழ்வை தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் மரியசெல்வி உள்ளிட்ட தமிழியல் துறை பேராசிரியர்கள் ஒருங்கிணைந்தனர். ஒட்டு மொத்த புள்ளிகளின் அடிப்படையில் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி அணியினர் முதலிடத்தை பிடித்து வெற்றி கேடயத்தை பெற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்