search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவி-இளம்பெண் மாயம்
    X

    கல்லூரி மாணவி-இளம்பெண் மாயம்

    • கல்லூரி மாணவி-இளம்பெண் மாயமாகினர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள வாழ்வாங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி முத்துமாரி (வயது 36). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த முத்துமாரி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் பந்தல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகரில் உள்ள சிவகாசி ரோட்டை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மகள் அந்தோணியம்மாள் (19). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அந்தோணியம்மாள் வீடு திரும்பாமல் மாயமானார். பல இடங்களில் தேடியும் பலன் இல்லை.

    இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×