search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி
    X

    குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி

    • கேசா டி மிர் பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது.

    ராஜபாளையம்

    ஆண்டுதோறும் அக்டோபர் 11-ந்தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை யொட்டி ராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக் மேல்நி லைப்பள்ளி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பி ரண்டு பிரீத்தி அறிவுறுத்துதலின்படி ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகசாமி துவங்கி வைத்தார். காந்தி சிலையிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்ற இப்பேரணியில் பெண் குழந் தைகளின் முக்கியத்துவம், கல்வி மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    பள்ளி தாளாளர் வைமா.திருப்பதி செல்வன் மற்றும் பள்ளி முதுநிலை முதல்வர் டி.அருணா தேவியின் வழி காட்டுதலின்படி நடைபெற்ற இப்பேரணி பள்ளி முதல்வர் அ.திருமலை ராஜன் விழா ஒருங்கிணைப்பாளர் ரா.ரேஷ்மா மற்றும் ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது.

    Next Story
    ×