என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

குடியரசு தினவிழாவில் என்.சி.சி. மாணவர்களுக்கு பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி விருது வழங்கினார்.
பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் குடியரசு தினவிழா

- சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
- விழாவில் கலந்து கொண்ட மாணவர்களும், பேராசிரியர்களும் குடியரசு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் 74-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார்.
முதல்வர் செந்தில்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின உரை நிகழ்த்தினார். மாரிச்சாமி, கல்லூரியின் ஐ.கியூ.ஏ.சி. ஒருங்கிணைப்பாளர் பிச்சிப்பூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கல்லூரி தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) சிறப்பு அணிவகுப்பு நடந்தது. விழாவில் கலந்து கொண்ட மாணவர்களும், பேராசிரியர்களும் குடியரசு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தேசிய மாணவர் படையின் வருடாந்திர பயிற்சி முகாமில் சிறந்த செயல்திறன் அடிப்படையில் 4-ம் ஆண்டு மாணவர் அபினாசுக்கு ''கேடட் அண்டர் ஆபீசர்'' என்ற ''ரேங்'' வழங்கப்பட்டது.
4-ம் ஆண்டு எந்திரவியல் துறை மாணவர் அருணுக்கு கம்பெனி குவாட்டர் மாஸ்டர் சார்ஜென்ட் என்ற ரேங்கும், 3-ம் ஆண்டு மாணவர் ராஜ்குமார், 2-ம் ஆண்டு மாணவர் கார்த்திக் ஆகியோருக்கு சார்ஜென்ட் ரேங்கும், 3-ம் ஆண்டு மாணவர்களான பாலமுரளி, மனோஜ், சங்கவி ஆகியோருக்கு ''கார்பொரல்'' ரேங்கும் வழங்கப்பட்டது.
கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் வகையில் 4-ம் ஆண்டு மாணவர் சிவ சுப்பிரமணியன் டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவிற்கான ஏற்பாடு களை கல்லூரி நிர்வாகம், கல்லூரி தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் மாதவன், உடற்கல்வி துறை இயக்குநர் சுந்தமூர்்த்தி மற்றும் பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
