search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்சேவை கூட்டுறவு  மையங்களாக மாற்ற ஆலோசனை
    X

    பல்சேவை கூட்டுறவு மையங்களாக மாற்ற ஆலோசனை

    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை பல்சேவை கூட்டுறவு மையங்களாக மாற்ற ஆலோசனை நடந்தது.
    • பொறியியல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையக கூட்ட அரங்கில் மண்டல இணைப்பதிவாளர் பா.செந்தில் குமார் தலைமையில் வேளாண்மை பொறியியல் துறை மற்றும் கூட்டுறவு துறை இணைந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்சேவை மையங்களாக மாற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் வேளாண்மை பொறியியல் துறை கண்காணிப்பு பொறியாளர் டி.டேனிஸ்டன், கூட்டுறவு சங்கங்க ளின்இணைப்பதிவாளர் அலுவலக துணைப்பதிவாளர் மற்றும் பணியாளர் அலுவலர் சந்தனராஜ், அருப்புக்கோட்டை சரக துணை பதிவாளர் சு.ரவிச்சந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர் சரக துணை பதிவாளர் க.அமுதா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் இளங்கோவன், கூட்டுறவுத்துறை மற்றும் சங்க செயலாளர்கள், பொறியியல் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×