search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதிதிராவிடர் பள்ளி, கல்லுரி விடுதிகளில் மாணவர் சேர்க்கை
    X

    ஆதிதிராவிடர் பள்ளி, கல்லுரி விடுதிகளில் மாணவர் சேர்க்கை

    • ஆதிதிராவிடர் பள்ளி, கல்லுரி விடுதிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
    • இதில் தங்கி பயில விரும்பும் மாணவர்கள் சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளை அணுகலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆதிதிராவிடர் நல பள்ளி மற்றும் கல்லுரி விடுதிகளுக்கான மாணவர்கள் சேர்க்கை புதியதாக இணைய வழியில் விண்ணப்பிக்கும் நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளதால் 2022-23-ம் கல்வியாண்டில் விருதுநகார் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என்ற இணைய வழியில் விடுதி மேலாண்மை அமைப்பு Hostel Management System எனும் செயலியின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பள்ளி விடுதிகளில் சேர வருகிற 20-ந் தேதி வரையும், கல்லூரி விடுதிகளில் வருகிற 18-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரையும், விண்ணப்பிக்கலாம்.

    இதில் தங்கி பயில விரும்பும் மாணவர்கள் சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×