என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மனைவி இறந்த சோகத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
- மனைவி இறந்த சோகத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சேத்தூர் அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சி யார்புரம் இந்திரா நகரை சேர்ந்தவர் சவுந்தர பாண்டியன்(23). இவருக்கும் வீரலட்சுமி (21) என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீரலட்சுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலை போலீசுக்கு தெரிவிக்காமல் பெண்ணின் உடலை எரித்தனர். இது தொடர்பாக சவுந்தரபாண்டியன் மற்றும் உறவினர்கள் மீது சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் சவுந்தரபாண்டியன் தனது சகோதரி வீட்டின் மாடி அறையில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். சம்பவத் தன்று நீண்ட நேரமாகியும் அறையில் இருந்து அவர் வெளியே வரவில்லை. இதையடுத்து சகோதரி அங்கு சென்று பார்த்த போது சவுந்தரபாண்டியன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து அவரது தாய் தங்கமாரி கொடுத்த புகாரின்பேரில் சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மனைவி இறந்த துக்கத்தில் சவுந்தர பாண்டியன் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
மற்றொரு சம்பவம்
விருதுநகரில் உள்ள பாண்டியன்நகர் மல்லி கிட்டங்கி தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(20). இவர் கடந்த சில மாதங்க ளாக அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இந்த நிலையில் அந்த பெண் ரமேஷ் மீது விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் ரமேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கை வாபஸ் பெறுமாறு ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தி னர் அந்த பெண்ணிடம் வலியுறுத்தினர். ஆனால அவர் மறுத்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த ரமேஷ் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். பாண்டியன்ந கர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்