search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோசமான அரசு பள்ளி கட்டிடத்தை மாற்றக்கோரி திடீர் சாலை மறியல்
    X

    சாலை மறியிலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

    மோசமான அரசு பள்ளி கட்டிடத்தை மாற்றக்கோரி திடீர் சாலை மறியல்

    • நரிக்குடி அருகே மோசமான அரசு பள்ளி கட்டிடத்தை மாற்றக்கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள அகத்தாகுளம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளிக்கூட கட்டிடம் மிகவும் சேதம டைந்த நிலையில் மாண வர்கள் வகுப்பறைக்குள் அமர்ந்து படிக்க முடியாத சூழ்நிலை நிலவி வந்தது.

    மேலும் மழைக்காலங்க ளில் தண்ணீர் வகுப்பறைக் குள் புகுந்து மழையில் நனைந்தபடி படித்து வந்த னர். இதனால் பிள்ளை க ளின் உயிருக்கு பயந்து பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப நெடுங்காலமாக தயங்கி வந்தனர். இந்த நிலையில் பள்ளிக்கு புதிய கட்டிடம் வேண்டி பொதுமக்களும், பெற்றோர் களும் பல முறை கோரிக்கை விடுத்தும் அரசும், மாவட்ட நிர்வாகமும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படு கிறது. இதனால் ஆவேச மடைந்த மாணவர்கள் தங்களது பெற்றோர்கள் மற்றும் கிராம மக்களுடன் சேர்ந்த நரிக்குடி- திருச்சுழி நெடுஞ்சாலையான விடத்தக்குளம் பேருந்து நிறுத்தம் முன்பு இன்று காலை சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் வாகனங்கள் வரிசையாக அணி வகுத்து நின்ற நிலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிக்கப்பட் டது. தகவல றிந்து அங்கு விரைந்து வந்த நரிக்குடி போலீசார் மற்றும் கல்வித் துறை, வருவாய்த்துறை அதி காரிகள் பேச்சு வார்த்தை யில் ஈடுபட்டனர்.

    மேலும் அகத்தாகுளம் தொடக்க பள்ளிக்கு புதிய பள்ளிக்கட்டிடம் கட்டுவது தொடர்பாக உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×