search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நேருவின் 135-வது பிறந்த நாள் விழா
    X

    நேருவின் 135-வது பிறந்த நாள் விழா

    • ராஜபாளையத்தில் நேருவின் 135-வது பிறந்த நாள் விழா நடந்தது.
    • என்.ஏ.அன்னப்ப ராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் முன்னாள் பிரதமர் நேருவின் 135-வது பிறந்த நாள் விழாவை யொட்டி அவரது சிலைக்கு பராமரிப்பு குழு சார்பில் கொண்டாடப்பட்டது. நேரு சிலைக்கு பராமரிப்பு குழுவின் தலைவர் கிருஷ்ண மூர்த்தி, நகராட்சி ஆணையாளர் நாகராஜன், வருவாய் அலுவலர் முத்துசெல்வம், அனைத்துமகளிர் காவல் ஆய் வாளர் மாரியம்மாள், போக்குவரத்துக் காவல் துணை ஆய்வாளர் கார்த்திகேயன், என்.ஏ. அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி உதவி தலை மையாசிரியர் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர். இந்த விழாவில் சிலை பராமரிப்புக் குழுவை சேர்ந்த ரகு, வாசுதேவராஜா, என்.ஏ.அன்னப்பராஜா நினைவு மேல் நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் ராஜா, என்.ஏ.ராமச்சந்திர ராஜா அறக்கட்டளை உறுப்பினர் ராம்விஷ்ணு ராஜா, ராம் வெங்கட்ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் என்.ஏ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் நன்றி கூறி னார். நேருவின் பிறந்த நாளான குழந்தைகள் தினவிழாவில் என்.ஏ. ராமச்சந்திர ராஜா குருகுலத் தொடக்கப் பள்ளி, முருகன் நடுநிலைப்பள்ளி, என்.ஏ.பாப்புராஜா நடுநிலைப்பள்ளி, என்.ஏ.அன்னப்ப ராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×