என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நெல்லை மாவட்டத்தில் சதுர்த்தி விழாவையொட்டி பொதுமக்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர்.
    • மணிமூர்த்தீஸ்வரத்தில் ஆசியாவிலேயே பெரிய ராஜகோபுரத்தை கொண்ட உச்சிஷ்ட விநாயகர் ஆலயத்தில் கடந்த கடந்த 9-ந்தேதி சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நெல்லை:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டா டப்பட்டு வருகிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் சதுர்த்தி விழாவையொட்டி பொதுமக்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர். இந்த நாளில் விநாயகருக்கு பிடித்தமான பொருட்களை நைவேத்தியம் படைத்து வழிபட்டால் துன்பங்களும், துயரங்களும் உடனே நீங்கி விடுவதாக நம்பி அவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

    மேலும் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நெல்லை மணிமூர்த்தீஸ்வ ரத்தில் ஆசியாவிலேயே பெரிய ராஜகோபுரத்தை கொண்ட உச்சிஷ்ட விநாயகர் ஆலயத்தில் கடந்த கடந்த 9-ந்தேதி சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் யாகசாலை பூஜைகள் மற்றும் அபிஷேக தீபாரதனையும், மாலையில் விஷேச அலங்கார தீபாரதனையும், அதனைத் தொடர்ந்து மூஷிக வாகனத்தில் திருவீதியுலாவும் தீபாரா தனைகளும் நடைபெற்றன. கோவிலில் வழிபாடுகள் இன்று அதிகாலையில் யாகசாலை பூஜை ஆரம்பிக்கப்பட்டு விநாயகர் மூலமந்திர ஹோமம் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து மூலஸ்தானத்தில் மாபொடி, மஞ்சள் வாசனைபொடி, பால், தயிர், பஞ்சாமிருதம், தேன் என 16 வகையான அபிஷேக பொருட்களால் ஸ்ரீமூர்த்தி விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தங்கமுலாம் பூசப்பட்ட கவசம் மலர் மாலைகள் அணிவித்து மகா தீபாரதனை நடைபெற்றது.

    தியாகராஜநகர் விக்னவிநா யகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி காலையில் சுவாமிக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு விநாயகர் தேரில் எழுந்தருளி திருவீதி உலா நடக்கிறது. நெல்லை மாநகரத்தில் இந்து அமைப்பினர் உள்பட பல்வேறு அமைப்பு சார்பில் கடந்த ஆண்டை போல் 76 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜையும், வழிபாடும் நடைபெறுகிறது. நெல்லை டவுன் ஈசான விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.

    போலீஸ் பாதுகாப்பு

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. மாவட்டத்தில் மொத்தம் 242 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    களக்காடு, திருக்குறுங்குடி, மானூர், வள்ளியூர், திசையன்விளை, அம்பை, சேரன்மகாதேவி உள்ளிட்ட ஏராளமான இடங்களில் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதனை யொட்டி மாவட்டம் முழுவதும் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பழமை வாய்ந்த சிவன் கோவிலில் உள்ள பிள்ளையார் உட்பட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பூ, பழங்கள், கொழுக்கட்டைகள் வைத்து பக்தி பாடல்கள் பாடி வழிபாடு நடத்தினர்.

    மாநகர இந்து முன்னணி சார்பில் சத்திரம் பஸ் நிலையம் அருகே 9 அடி உயர பிள்ளையார் சிலை வைக்கப்பட்டு இன்று காலை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் மாநகர இந்து முன்னணி நிர்வாகிகள் இசக்கிமுத்து, ராகவேந்திரா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருச்செந்தூர்

    திருச்செந்தூர் பகுதியில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் காயாமொழி முப்பிடாதி அம்மன் கோவில் அருகில் சானாதன கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மேலும் கோவில்களில் நடந்த சதுர்த்தி விழாவில் பக்தர்கள் எருக்கம் பூ மற்றும் அருகம்புல் ஆகியவற்றை மாலையாக கொண்டு வந்து விநாயகருக்கு சூட்டினர். மேலும் அவர்கள் கொண்டுவந்த நைவேத்திய பொருட்களான சுண்டல், பிடி கொழுக்கட்டை, மோதகம், அப்பம், அவல், பொரி, உள்ளிட்டவற்றையும் விநாயகருக்கு படைத்தனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை நகரில் மட்டும் வழக்கம்போல் இந்த ஆண்டும் 37 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனை யொட்டி அங்கு மட்டும் சுமார் 700 போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். தென்காசி மாவட்டம் முழுவதும் மொத்தம் 320 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளது. மொத்தமாக 2 ஆயிரம் போலீசார் பாது காப்புக்காக போடப்ப ட்டுள்ளனர். இதுதவிர இன்று சதுர்த்தி விழாவை யொட்டி மாவட்டம் முழுவதும் ஏராளமான கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கோவில்கள் விழாக்கோலம் பூண்டன.

    Next Story
    ×