என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேடும் பள்ளமுமாக காணப்படும் மண்சாலை.
சாலை வசதி இல்லாததால் கிராமமக்கள் அவதி
- கள்ளிமேடு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- மழைநீர் தேங்கி நிற்பதால் சேறும் சகதியுமாக சாலை காட்டியளிக்கிறது.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ராராமுத்திரகோட்டை கீழ கள்ளிமேடு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்திற்கு செல்லும் கிராம சாலை பல ஆண்டுகளாக மண் சாலையாகவே உள்ளதால் கிராமவாசிகள் பல அவதியுற்று வருகின்றனர். குறிப்பாக மழை காலங்களில் தெரு சாலையில் பல இடங்களில்
மழைநீர் தேங்கி நிற்பதால் சேறும் சகதியுமாக மாறி நடந்து செல்லவோ, வாகனங்களில் செல்லவோ முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே மண்சாலையை தார் சாலையாக மாற்றிதர வேண்டும் என கிராமமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story