என் மலர்
உள்ளூர் செய்திகள்

பட்டா கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
- இக்கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.
- தருமபுரி-திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் பழனி ஆண்டவர் நகர் பகுதியைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பழனி ஆண்டவர் நகர் கிராமத்தில் சுமார் 45-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன.
இக்கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக கிராம மக்கள் பட்டா கேட்டு வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குடியிருந்து வரும் வீட்டிற்கு பட்டா இல்லாத காரணத்தால் மின் இணைப்பு இல்லாமல் மின்சாரம் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே தருமபுரி-திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் பழனி ஆண்டவர் நகர் பகுதியைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இப்பகுதியில் வசிக்கும் 46 குடும்பத்திற்கு உடனடியாக மாவட்ட நிர்வாகம் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். போச்சம்பள்ளி காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு பிறகு வட்டாட்சியரிடம் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.






