என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    கிருஷ்ணகிரியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    • பட்டபடிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
    • கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும்

    கிருஷ்ணகிரி,

    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று மாலை நடந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்திவைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும். பட்டபடிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதற்கு கிருஷ்ணகிரி வட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் முத்துராமன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் அறிவழகன் சிறப்புரையாற்றினார். இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் தங்கராஜ், நிர்வாகிகள் செந்தில்குமார், இளவரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×