search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
    X

    கைதான சுதா.

    லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

    • பட்டா மாறுதல் வழங்க கிராம நிர்வாக அலுவலர் சுதா ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
    • திருவாரூர் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு போலீசில் மதியழகன் புகார் அளித்துள்ளார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே கிருஷ்ணகோட்டகம் கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன் (65). இவர் தனது சகோதரர் மாசிலாமணி என்பவரிடமிருந்து தான செட்டில்மெண்ட் அடிப்படையில் 2 ஏக்கர் நிலம் வாங்கினார்.

    இதற்காக பட்டா மாறுதல் கோரி பெருமாளகரம் கிராம நிர்வாக அலுவலர் சுதா (42) என்பவரிடம் விண்ணப்பித்தார். அப்போது பட்டா மாறுதல் வழங்க கிராம நிர்வாக அலுவலர் சுதா ரூ 6000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சமாக பணம் கொடுக்க மதியழகன் விரும்பவில்லை. அதனால் கிராம நிர்வாக அலுவலர் சுதா லஞ்சம் கேட்டது குறித்து திருவாரூர் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு காவல் நிலையத்தில் மதியழகன் புகார் அளித்துள்ளார்.

    புகாரைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை ஆலோசனைப்படி ரசாயனம் தடவி வழங்கப்பட்ட பணத்தை மதியழகன் கிராம நிர்வாக அலுவலர் சுதாவிடம் வழங்கியுள்ளார். அப்போது துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் கூடியிருந்த லட்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவப்பட்ட பணத்தை மதியழகன் கொடுக்கும்போது கையும் களவுமாக கிராம நிர்வாக அலுவலர் சுதாவை பிடித்தனர். இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சுதாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டா மாறுதலுக்காக லஞ்சம் வாங்கி கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட விவகாரம் கொரடாச்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×