search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் அருகே ரூ.52 லட்சம் மதிப்பில் கால்நடை மருந்தகம் கட்டும் பணி-மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
    X

    விளாத்திகுளம் அருகே ரூ.52 லட்சம் மதிப்பில் கால்நடை மருந்தகம் கட்டும் பணி-மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்

    • குளத்தூரில் புதிய கால்நடை மருத்தகம் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது.
    • நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவர் மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், குளத்தூரில் ரூ.52-லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்தகம் புதிய கட்டிடம் கட்டும் பணியினை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவர் கோகுல், கால்நடை ஆய்வாளர் சுசிலா, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, நகர செயலாளர் வேலுச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஊராட்சி தலைவர் மாலதி, ஒன்றிய அவைத்தலைவர் கெங்குமணி, மாவட்ட பிரதிநிதிகள் பாண்டியராஜன், செல்வ பாண்டி, ஒன்றிய பொருளாளர் முனியசாமி, துணை செயலாளர் ராஜபாண்டி, ஊராட்சி துணைத் தலைவர் முத்துச்செல்வி, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் முருகேசன், மாவட்ட துணை அமைப்பாளர் மாதவடியான், ஒன்றிய சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் தர்மநேச செல்வின், இளைஞர் அணி துணை அமைப்பாளர் பேச்சிமுத்து, கிளை செயலாளர்கள் பரமசிவ பாண்டியன், செல்வராஜ், சொரிமுத்து, அன்னாசிமுத்து

    பெருமாள், தகவல் தொழில்நுட்ப அணி பாரதிதாசன், முனியசாமி உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×