என் மலர்
உள்ளூர் செய்திகள்

கால்நடை முகாம் நடந்தது.
கால்நடை மருத்துவ முகாம்
- மாடுகளுக்கு சினை ஊசி போடுதல், குடல் புழு நீக்க பரிசோதனை செய்யப்பட்டது.
- ஏராளமான கிராமமக்கள் தங்கள் வளர்ப்பு பிராணிகளுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியம், காளகஸ்தி நாதபுரம் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு செம்பனார்கோயில் கால்நடை மருத்துவர் அன்பரசன் தலைமையில் டாக்டர்கள் சுதா, பிரபாவதி, மோனிஷா ஆகியோர் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர்.
மாடுகளுக்கு சினை ஊசி போடுதல், மலடு நீக்குதல், குடல் புழு நீக்குதல் மற்றும் ஆடு, கோழி, நாய்களுக்கு நோய் தடுப்பூசிகளும் போடப்பட்டது.
முகாமிற்கான ஏற்பாடு களை ஊராட்சி தலைவர் ஜோதிவள்ளி, துணை தலைவர் சரவணன் ஆகியோர் செய்திருந்னர்.
முகாமில் ஏராளமான கிராம மக்கள் தங்கள் வளர்ப்பு பிராணிகளுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இதில் வாழ்ந்து காட்டு வோம் திட்டத்தின் பொறுப்பா ளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






