என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
    X

    பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

    • போக்சோ சட்டத்தில் நடவடிக்கை
    • திருமண ஆசைகாட்டி துணிகரம்

    குடியாத்தம்:

    குடியாத்தம் செருவங்கி புதுதெரு பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன் இவரது மகன் பிரதீப் (வயது 22) வெல்டிங் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் 16 வயதான மாணவியை காதலித்து வந்தார். மாணவியிடம் திருமண ஆசைகாட்டி பிரதீப் நெருக்கமாக இருந்துள்ளார்.

    இந்நிலையில் அந்த மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது இதனையடுத்து மாணவியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

    அங்கு பரிசோதனை செய்ததில் மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தீவிரமாக விசாரித்தபோது வாலிபர் பிரதீப் ஆசை வார்த்தைகள் கூறி நெருக்கமாக இருந்ததாக கூறி உள்ளார்.

    இதனை தொடர்ந்து அவர்கள் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அத ன்பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நிர்மலா ஆகி யோர் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×