என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் ஜெயில் கைதி திடீர் சாவு
- குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்
- போலீசார் விசாரணை
வேலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 35) சாராயம் விற்பனை தொடர்பாக குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 11-ந் தேதி இவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பரமசிவம் இன்று காலை இறந்தார்.
இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். .
Next Story






