என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளிகொண்டா நெடுஞ்சாலையில் கடும் பனி மூட்டம்
- எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்லும் வாகனங்கள்
- வாகன ஓட்டிகள் கடும் சிரமம்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்த வண்ணம் இருந்தது கடந்த இரு தினங்களாக மழை இல்லாமல் லேசான பனிபொழிவு காணப்படுகிறது.
வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கும்போது சுமார் 10 மீட்டர் தொலைவில் உள்ள வாகனங்கள் கூட சரிவர தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி இயக்கி செல்கின்றனர்.
இதனால் நெடுஞ்சாலையில் அதிக அளவில் பனிமூட்டமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
Next Story






