என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி நேரத்தில் பஸ்வசதி இல்லை
- கலெக்டரிடம் பொதுமக்கள் வேண்டுகோள்
- தூய்மை பணி மேற்கொள்ள உத்தரவு
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த அப்புக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட பண்ணையார் திப்பை மலைப்பகுதிக்கு சாலை அமைக்கும் பணியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மாணிக்க கொல்லை - அப்புக்கல் இடையே சாலை வசதி செய்து தர வேண்டும். ஏரிக்கொல்லை கிராமத்தில் இருந்து அணைக்கட்டுக்கு பள்ளி மாணவர்கள் செல்லும் நேரத்திற்கு பஸ் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதில் அளித்த கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதனை தொடர்ந்து யாதவபுரம் பகுதியில் சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள திடக்கழிவுகளை பார்வையிட்டார், அதனை உடனடியாக அகற்றி கிராமத்தை தூய்மை பணி மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் 100 நாள் வேலை திட்டத்தை பார்வையிட்ட கலெக்டர் தொழிலாளர்களிடம், பணிக்கான ஊதியம் சரியான முறையில் வழங்கப்படுகிறதா? என கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகர்,சாந்தி, அப்புக்கல் ஊராட்சி மன்ற தலைவர் (பொறுப்பு) சுரேஷ், ஒன்றிய குழு உறுப்பினர் சபரி சோபனா உடன் இருந்தனர்.






