என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவில் அர்ச்சகர் தூக்கிட்டு சாவு
- உடல் நலக்குறைவால் விபரீதம்
- போலீசார் விசாரனை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு காந்திரோடு பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 26) கோவில் அர்ச்சகர்.
அந்த பகுதியில் இருக்கும் 4 கோவில்களுக்கும் தின ந்தோறும் பூஜை செய்து வருவது வழக்கமாக கொண்டு இருந்தார்.
அருள்ராஜிக்கு உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை அடிக்கடி இருந்து வந்தது. இதற்காக மருத்துவ மனையில்சிகிச்சை பெற்றும் வந்தார். மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதனால் மன உலைச்சலுக்கு ஆளானார். பின்னர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செயது கொண்டார். இதனை கண்ட அவரது தாயார் கத்தி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அணைக்கட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த போலீ சார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலூம் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
Next Story






