என் மலர்
உள்ளூர் செய்திகள்

கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 லட்சம் திருடும் காட்சி கேமராவில் பதிவு
- ஆட்டோவில் வந்து தப்பி சென்றனர்
- போலீசார் விசாரணை
வேலூர்:
சென்னையை சேர்ந்தவர் மகேஷ் ராஜசேகரன் (வயது30). இவர் சம்பவத்தன்று சென்னையிலிருந்து காரில் வேலூர் வழியாக பெங்களூருக்கு புறப்பட்டு வந்தார்.
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் முன்பாக காரை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார்.
காரில் ரூ.2 லட்சம் மற்றும் செல்போன் காரின் மற்றொரு சாவி, சில ஆவணங்கள் இருந்தன. அவர் ஓட்டலில் சாப்பிட்ட நேரத்தில் மர்ம கும்பல் காரின் கண்ணாடியை உடைத்து அதிலிருந்து ரூ.2 லட்சம், செல்போன், கார் சாவி ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் ராஜசேகரன் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
ஓட்டல் காவலர்கள் மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைக்காரர்கள் ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தினர்
தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதிலிருந்த ஒரு கேமராவில் காரில் மர்மநபர்கள் பணத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.
ராஜசேகரன் காரை பூட்டிவிட்டு ஓட்டலுக்குள் சென்றதும் ஆட்டோவில் வந்து 3 பேர் இறங்குகின்றனர். ஒருவர் கார் கண்ணாடியை உடைத்து பணம், செல்போன் ஆகியவற்றை திருடுகிறார். பின்னர் இருவரும் அவர்கள் ஏற்கனவே வந்த ஆட்டோவில் தப்பிச் செல்கின்றனர்.
இந்த காட்சிகள் கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. இதில் உள்ள மர்ம நபர்கள் வேலூரைச் சேர்ந்தவர்களா? அல்லது வெளியூரை சேர்ந்த கொள்ளையர்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






