search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தம் அருகே மீண்டும் சிறுத்தைபுலி நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி
    X

    சிறுத்தை கடித்து இறந்த ஆட்டை படத்தில் காணலாம்.

    குடியாத்தம் அருகே மீண்டும் சிறுத்தைபுலி நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

    • ஆட்டை கடித்து கொன்றது
    • நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் வலியுறுத்தல்

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி முதலியார் ஏரி வனப்பகுதியை ஒட்டியபடி தோனிகான் பட்டி உள்ளது இங்கு வனப்பகுதியை ஒட்டி ஒரு சில விவசாயிகள் வசித்து வருகின்றனர் அவர்கள் ஆடுகளையும் மாடுகளையும் மேய்த்து வருகின்றனர்.

    இவர்கள் வசிக்கும் வீட்டிற்கு சற்று தொலைவில் வன ஊழியர்கள் தங்கும் கொட்டகையும் உள்ளது. அங்கு வசிக்கும் விவசாயிகள் தவமணி, கணபதி ஆகியோர் வீட்டு கொட்டகையில் கட்டி இருந்த பெரிய ஆடு மற்றும் குட்டி ஆடு, கன்று குட்டியை 2மாதங்களுக்கு முன்பு முன்தினம் சிறுத்தைகள் வனப்பகுதிக்கு இழுத்துச் சென்று தின்றுள்ளது.

    இந்நிலையில் கடந்த வாரம் இதே தோனிகான் பட்டி பகுதியில் வசிக்கும் முனிரத்தினம் விவசாயி இவர் வீடு நிலத்தில் இருப்பதால் பாதுகாப்பிற்காக வீட்டில் நாய்களை வளர்த்து வந்துள்ளார்.

    இரவு நேரங்களில் சிறுத்தைகள் இவர் வசிக்கும் வீட்டு அருகே உலா வருமாம் அந்த சிறுத்தைகள் அவரின் வளர்ப்பு நாய் கடந்த வாரம் கடித்துக் கொன்றுள்ளது.

    இந்நிலையில் நேற்று முன் இதே பகுதியான கல்லப்பாடி தோனிகான் பட்டியில் வசிக்கும் கணபதியின் ஆட்டை நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மாலை பெரிய சிறுத்தை ஒன்று கவ்வி இழுத்துச் சென்றுள்ளது ஆட்டின் அலறல் சத்தம் கேட்ட கணபதி குடும்பத்தினர் சத்தம் கேட்ட திசையில் ஓடி சென்றபோது பெரிய சிறுத்தை ஆட்டின் கழுத்தை கல்வி இழுத்து செல்வது தெரிய வந்தது.

    உடனே இவர்கள் கூச்சலிட்டு சத்தம் எழுப்பியதும் சிறுத்தை ஆட்டை விட்டு விட்டு ஓடிவிட்டது உடனடியாக அந்த ஆட்டை கொண்டு வந்து சிகிச்சை அளித்தனர்.நேற்று காலையில் அந்த ஆடு பரிதாபமாக இறந்து விட்டது.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே வளர்ப்பு நாய் மற்றும் ஆட்டை சிறுத்தைகள் கொன்ற சம்பவத்தால் தோனி கான்பட்டி பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்து உயிருக்கு பயந்தபடி வாழ்ந்து வருகின்றனர்.

    Next Story
    ×