search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புது மாப்பிள்ளை மர்ம சாவு
    X

    புது மாப்பிள்ளை மர்ம சாவு

    • சில நாட்களாக மன வேதனையில் இருந்தார்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூரை அடுத்து பின்னதுரை பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் ரகு (வயது 29), கட்டிட தொழில் செய்து வந்தார்.

    இவருக்கும் கீழ் கொத்தூர் பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகள் சினேகாவுக்கும் கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் மனைவி சினேகா கடந்த 15 நாட்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பலமுறை ரகு மனைவியை வீட்டுக்கு அவர் வரவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக ரகு மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று காலை 10 மணி அளவில் ரகு, அக்காள் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ரகுவின் உறவினர்கள் பலவேறு இடங்களில் அவரைதேடினர்.

    இந்த நிலையில் மடையப்பட்டு அருகே உள்ள கருத்த மலை காப்புக்காட்டு பகுதி யில் உள்ள கசிவுநீர் குட்டை அருகே மர்மமான முறையில் ரகு இறந்து கிடந்ததை அந்த வழியாகசென்றவர்கள் பார்த் துள்ளனர்.

    இது குறித்து தக வல் கிடைத்ததும் வேப்பங் குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    ரகுவின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×