search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை விட்டு சென்ற தாய் தானாக திரும்பி வந்தார்
    X

    அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை விட்டு சென்ற தாய் தானாக திரும்பி வந்தார்

    • இறந்த குழந்தையை பிரேத பரிசோதனை கூடத்தில் வைத்திருந்தனர்
    • உடலை டாக்டர்கள் தாயிடம் ஒப்படைத்தனர்

    வேலூர்:

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் குழந்தையை விட்டு சென்ற தாய் பல மணி நேரம் கழித்து தானாக திரும்பி வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி பகுதியை சேர்ந்த மணி (வயது 30), நரிக்குறவர். இவரது மனைவி சங்கீதா என்கிற சினேகா(25) கர்பமாக இருந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உறவினர்கள் சினேகாவை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை பலவீனமாக சோர்ந்து காணப்படுவதால், மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்க டாக்டர்கள் பறிந்துரை செய்தனர். அதன்படி கடந்த 10 நாட்களாக குழந்தை மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை குழந்தை அபாய கட்டத்தில் உள்ளதாக டாக்டர்கள் தாய் சினேகா விடம் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து அந்த குழந்தை நேற்று முன்தினம் இரவே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. அப்போது, இந்த தகவலை அந்த குழந்தையின் தாயிடம் டாக்டர்கள் தெரிவிக்க வந்துள்ளனர். ஆனால் சினேகா மருத்துவமனையில் இல்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் அவரை அங்கு தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து இறந்த குழந்தையை பிரேத பரிசோதனை கூடத்தில் வைத்திருந்தனர்.

    இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வேலூர் தாலுகா போலீசில் ேநற்று புகார் அளிக்கப்பட்டது. குழந்தையை தாய் விட்டு ச்சென்றதாக மருத்துவ மனையில் பரபரப்பாக பேசப்பட்டது.

    இந்த நிலையில் சினேகா தனது கணவர் மணி மற்றும் உறவினர்களுடன் நேற்று இரவு பல மணி நேரம் கழித்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள், குழந்தையை விட்டுவிட்டு எங்கு சென்றீர்கள்? என்று கேட்டனர்.

    அப்போது குழந்தை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் கூறிய தகவலை, ரத்தினகிரிக்கு சென்று தனது கணவர் மற்றும் உறவினர்களை அழைத்து வர சென்றதாக கூறினார். குழந்தையின் உடலை டாக்டர்கள் தாய் சினேகா விடம் ஒப்படைத்தனர். இதனால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×