என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேஸ்திரி தூக்கிட்டு சாவு
- குடும்ப தகராறில் விபரீதம்
- மகன் இறந்த துக்கத்தில் மது பழக்கத்திற்கு அடிமையானார்
வேலூர்:
விரிஞ்சிபுரம் அருகே உள்ள இந்திரா நகர் நேரு வீதியைச் சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 24) கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் 2-வது மகன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் இறந்துவிட்டார்.
இதற்கு பிறகு கணேஷ்குமார் மது பழக்கத்திற்கு அடிமை யானார். தினமும் குடித்துவிட்டு வந்தார்.
இதனால் அவரது குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த கணேஷ்குமார் வீட்டில் உள்ள அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு தூக்கில் தொங்கினார்.
அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணேஷ் குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






