என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொடர் மழையால் சேறும், சகதியுமாக மாறிய நேதாஜி மார்க்கெட்டை எம்.எல்.ஏ., மேயர் நேரில் ஆய்வு செய்த காட்சி.
எம்.எல்.ஏ., மேயர் நேரில் ஆய்வு
தொடர் மழையால் சேறும், சகதியுமாக மாறிய நேதாஜி மார்க்கெட்
- எம்.எல்.ஏ., மேயர் நேரில் ஆய்வு
- சீரமைத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி
வேலூர்:
வேலூரில் பெய்த பரவலான மழையால் வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்துக்கு உட் பட்ட நேதாஜி மார்க்கெட் சேறும், சகதியுமானது, இதனை அவற்றை சரிசெய்ய உரிய நடவ டிக்கை எடுக்கும்படி பொது மக்கள், வியாபாரிகள் எம்எல்ஏ மற்றும் மேயர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, எம் எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆகியோர் மாநகராட்சி அதிகாரிகளு டன் நேற்று மாலை நேதாஜி மார்க்கெட்டுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது, மார்க்கெட்டுக்குள் வாகனங்கள் வந்து செல்லும் பகுதியில் அழுகிய காய்கறிகள், வாழைத்தார் உள்ளிட்டவை கொட்டப் பட்டு துர்நாற்றம் வீசியது.
மேலும் மழை காரணமாக அப்பகுதி சேறும், சகதியு மாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் காணப்பட்டது. அதைப் பார்த்த எம்.எல்.ஏ., மேயர் ஆகியோர், மார்க்கெட்டில் சேகரமாகும் அழுகிய காய் கறிகள், குப்பைகளை தினமும் சேகரித்துச் செல்லும் படி மாநகராட்சி ஊழிய ர்களுக்கு உத்தரவிட்டனர்.
மேலும் அங்குள்ள வியாபாரிகளிடம் அழுகிய காய்கறிகள், குப்பைகளை சாலையில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். அவ ற்றை மாநகராட்சி ஊழியர் களிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினர். மேலும், நேதாஜி மார்க்கெட்டில் மழைநீர் தேங்கி சேறும், சகதியும் ஆகாத வகையில் உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என்று தெரிவித் தனர்.
அதையடுத்து அவர்கள் சாரதி மாளிகையில் ஆய்வு செய்தனர். அங்குள்ள கழிவறையை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். மேலும் அங்கு சில கடைக்காரர்கள், பொதுமக்கள் செல்ல வழி பயின்றி ஆக்கிரமிப்பு செய்து கடைக்கு வெளியேயும் பொருட்களை வைத்திருந் தனர். அதை அகற்றவும் உத்தரவிட்டனர்.
பின்னர் சாரதி மாளிகையில் அடிக்கடி திருட்டு போவதாகவும், அதை தடுக்க சிசிடிவி கேமராக் கள் பொருத்தி தரும்படி வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
ஆய்வின் போது 2வது மண்டலக்குழு தலைவர்நரேந்திரன், உதவி கமிஷனர் சுதா, உதவி பொறியாளர் வெங்கடே சன், சுகாதார அலுவலர் லூர்துசாமி, அனைத்து வணிகர் சங்கங்களின் பேர மைப்பு மாவட்ட தலைவர். ஞானவேலு, நேதாஜி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் எல்.கே.எம்.பி. வாசு மற்றும் கலந்து பலர் கொண்டனர்.






