search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டில் பதுக்கிய குட்கா பறிமுதல்
    X

    வீட்டில் பதுக்கிய குட்கா பறிமுதல்

    • போலீசார் சோதனை சிக்கியது
    • 17 கிலோ பறிமுதல்

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா பகுதியில் குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வதாக பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நடுத்தெரு பகுதியில் போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது முகமது இப்ராஹிம் (வயது 46), அதே பகுதியை சேர்ந்த முகமது ரபீக் (34). ஆகியோர் வீட்டில் குட்கா போன்ற போதை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    2 மூட்டைகளில் இருந்த 17 கிலோ எடை கொண்ட குட்கா ேபான்ற போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் 25ஆயிரம் இருக்கும் எனகூறப்படுகிறது.

    Next Story
    ×