என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கழிவு, மழை நீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு
குடியாத்தம்:
குடியாத்தம் நகராட்சி 2-வது வார்டு 4-வது புது ஆலியார் தெருவில் மழைக்காலங்களில் ஊராட்சி பகுதிகளில் இருந்து வரும் மழைநீரும், கழிவுநீரும் வெளியேற வழி இல்லாமல் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் கழிவு நீரும், மழை நீரும் தேங்கி வெளியேற பல நாட்கள் ஆகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று மாலை குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கடராமன், குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன், தாசில்தார் விஜயகுமார் ஆகியோர் மழை நீரும், கழிவு நீரும் தேங்கியுள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் அந்த கழிவு நீரும் மழை நீரும் செல்ல தேவையான வழிகளை ஏற்படுத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம். கார்த்திகேயன், எஸ்.சாந்தி, நகராட்சி பொறியாளர் சிசில்தாமஸ், நகர மன்ற உறுப்பினர் அன்வர், கள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் உமாபதி, துணை தலைவர் அஜீஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்