search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயி வீட்டில் 6 பவுன் நகை கொள்ளை
    X

    விவசாயி வீட்டில் 6 பவுன் நகை கொள்ளை

    • கதவை உடைத்து கைவரிசை
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள தெள்ளூர் ஜாமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 54). விவசாயி. இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் கள் இவருடைய வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    அங்கு பீரோவில் இருந்த செயின், மோதிரம் மற்றும் சிறுவர்களுக்கான நகை என மொத்தம் 6 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    வெளியூரில் இருந்து வீடு திரும்பிய அண்ணாமலை வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு திடுக்கிட்டார்.

    இது குறித்து அரியூர் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

    விவசாயி வீட்டில் நகை கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×