என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சாலையில் விழுந்த புளியமரம் அகற்றம்
- கன மழையால் முறிந்து விழுந்தது
- போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி
அணைக்கட்டு:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனிடையே நேற்று இரவு 9 மணி முதல் சுமார் 3 மணி வரை அணைக்கட்டு, ஒடுகத்தூர் ஆகிய சுற்றுப்பகுதியில் மழை வெளுத்து வாங்கியது.
இதனால் அணைக்கட்டு- ஒடுகத்தூர் செல்லும் பிரதான சாலையில் எடைத்தெரு எனும் கிராமத்தில் சாலையோரம் இருந்த புளியமரம் முறிந்து சாலையில் விழுந்தது.
இதனால் மரத்தின் அடியில் இருந்த மல்லிகை கடையின் மேல் பகுதி சிறிது சேதமாகியது. மேலும் பிரதான சாலை என்பதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் வாகனங்கள் செல்ல முடியாமல் நின்று கொண்டு இருப்பதாகவும் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்து விரைந்து வந்த சப்- இன்ஸ்பெக்டர் தயாநிதி மற்றும் போலீசார் சாலையில் நடுவே போக்குவரத்துக்கு இடையூராக இருந்த புளியமரத்தினை பொக்லைன் எந்திரத்தின மூலம் அகற்றி போக்குவரத்துக்கு வழிவகை செய்தனர்.
வேப்பங்குப்பம் போலீசார் கூறுகையில்:-
தற்போது தொடர் மழைக்காலம் என்பதால் சாலையோரம் உள்ள பழமையான புளியமரங்கள் வேரோடு சாய்கின்றது. மரத்தின் கிளைகள் முறிந்து சாலையில் விழுந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்ப்படுத்துகின்றது. சில நேரங்களில் வாகமத்தின் மீது கூட விழலாம் எனவே மழைக்காலங்களில் குடும்பத்துடன் வாகனத்தில் செல்லுவதை குறைத்துக்கொள்ள வேண்டும், குழந்தைகளை அழைத்து செல்லக்கூடாது எனவும் மரங்கள் நிறைந்த இடத்தில் செல்லும் போது முழு கவனமுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்