என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

வேலூரில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதி
வேலூர்:
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் இறுதியிலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். சாதாரணமாக 100 டிகிரியை கடந்து வெப்பநிலை பதிவாகும்.
ஆனால் இந்த ஆண்டு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெயிலின் தாக்கம் இல்லாமல் மழையால் இதமான காலநிலை நிலவியது. மார்ச் மாதம் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் இப்போது வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். நேற்று வேலூர் மாவட்டத்தில் 95.5 டிகிரி அளவுக்கு வெயில் பதிவானாலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உணரப்பட்டது.
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். பொதுமக்கள் வெயிலை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக பகலில் வெயில் சுட்டெரித்தாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று 95 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானாலும் இரவு 8 மணிக்கு திடீரென சாரல் மழை பெய்தது. இதனால் பகலில் இருந்த வெப்பம் குறைந்து இதமான சூழல் நிலவியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
