என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளிகொண்டா, அணைக்கட்டு பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
- பராமரிப்பு பணிகள் நடக்கிறது
- மின் அதிகாரி தகவல்
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா, அணைக்கட்டு துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) அத்தியாவசிய அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதன் காரணமாக வரதலம்பட்டு, கரடிகுடி, டி.சி.குப்பம், ஓங்கப்பாடி, மற்றும் தேவிசெட்டிகுப்பம், பிச்சாநத்தம், பூஞ்சோலை, மகமதுபுரம், குருவராஜ பாளையம், சின்ன பள்ளி குப்பம், ஓ.ராஜாபாளை யம்,வேப்பங்குப்பம், சேர்பாடி, ஒதியத்தூர், கீழ்கிருஷ்ணாபுரம், உள்ளி, வளத்தூர், கூட நகரம், மேலாளத்தூர் ஆகிய பகுதிகளிலும், பிராமணமங்கலம், மற்றும் ஒடுகத்தூர், மேல்அரசம்பட்டு, ஆசனம்பட்டு, தென்புதூர், கீழ்கொத்தூர், அகர ராஜபாளையம், போடி பேட்டை, அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த தகவலை பள்ளிகொண்டா செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
Next Story