search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிளஸ்-2 மாணவன்
    X

    சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிளஸ்-2 மாணவன்

    • போக்சோ சட்டத்தில் நடவடிக்கை
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரின் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் 8 வயது மகள். தற்போது 4-ம் வகுப்பிற்கு செல்ல உள்ளார்.

    இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவன் சிறுமியை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து வெளியே சொன்னால் ஒழித்து விடுவேன் என சிறுமியை மிரட்டி உள்ளார். இதனால் பயந்து நிலையில் இருந்துள்ளார்.

    சிறுமியை கண்ட பெற்றோர்கள் விசாரித்த போது அந்த மாணவன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அந்த சிறுமியின் பெற்றோர்கள் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதனை தொடர்ந்து அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சியாமளா அந்த மாணவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    Next Story
    ×