என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் அருகே பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு சாவு
    X

    வேலூர் அருகே பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு சாவு

    • செல்போன் பார்த்ததை கண்டித்ததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள ஆற்காட்டான்குடிசை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகள் திலகா (வயது 17).

    பென்னாத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். சமீபத்தில் தேர்வு எழுதி முடித்தார். தற்போது விடுமுறையில் வீட்டில் இருந்த திலகா அடிக்கடி செல்போன் பார்த்ததாக கூறப்படுகிறது .

    மேலும் வீட்டுவேலையும் செய்யவில்லை. இதனைஅவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    இதனால் மனமுடைந்த திலகா நேற்று வீட்டில் உள்ள அறையில் தூக்கில் தொங்கினார்.

    மகள் தூக்கில் தொங்குவதைக் கண்ட அவரது பெற்றோர் கதறி அழுதனர். உடனடியாக அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே திலகா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு சென்று மாணவியின் உடலைப் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×