என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சுஜாதா பேசிய காட்சி.
வேலூர் மாநகராட்சி கூட்டத்தில் 49 தீர்மானங்கள் நிறைவேற்றம்
- 4 மண்டலங்களிலும் உள்ள மழை நீர் கால்வாய்களை தூர்வார நிதி ஒதுக்கீடு
- 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி
வேலூர்:
வேலூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் சுஜாதா தலைமையில் இன்று நடந்தது. கமிஷனர் அசோக்குமார் துணை மேயர் சுனில் குமார் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அமல்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மாநகராட்சி சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 4 மண்டலங்களிலும் உள்ள மழை நீர் கால்வாய்களை தூர்வார நிதி ஒதுக்கீடு செய்வது மேலும் குடிநீர் குழாய்களை சீரமைப்பது கால்வாய் பணிகளை துரித படுத்த நடவடிக்கை எடுப்பது என்பது உள்பட 49 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story