search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதியவர் தூக்கிட்டு தற்கொலை
    X

    முதியவர் தூக்கிட்டு தற்கொலை

    • உடல்நல குறைவால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த பிராமணமங்களம் பகுதியில் வசித்து வந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 56) இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும் 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

    நேற்று அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் கரும்பு ஆலை கொட்ட கையில் சவுந்தர்ராஜன் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சவுந்தராஜன் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்குபதிவு செய்த பள்ளிகொண்டா போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களாக அவருக்கு உடல் சம்மந்தமான நோய் இருந்து வந்ததாகவும் இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

    ஆனாலும் உடல் நிலை சரியாகாததால் அவர் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் கூறினர்.

    Next Story
    ×